தேசபந்து மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசபந்து மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தோடு[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கலைப்பிரிவில் இளங்கலைப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
டாக்டர் ஹேமேந்திரநாத் தாஸ்குப்தா, திரு ஜிதேஷ் சந்திர குஹா, டாக்டர் சுத்தஸ்வதா போஸ் மற்றும் திரு நட்சத்திர ராய்சவுத்ரி ஆகிய புரவலர்களின் முயற்சியால் கொல்கத்தாவின் சதானந்தா வீதியில் உள்ள தேசபந்து பெண்கள் பாடசாலை கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 1975 ஆம் ஆண்டில் தான் இதன் ராஷ்பிஹாரி அவென்யூவில் உள்ள தற்போதைய இடத்தில் அதன் சொந்த கட்டிடத்தை கட்டி மாற்றப்பட்டது.
அங்கீகாரம்
கொல்கத்தா பல்கலைக்கழத்தோடு இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் பி தரமதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது
படிப்புகள்
இக்கல்லூரியில் பின்வரும் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது (பி. ஏ./பி.எஸ்.சி / பி.காம்.)[2]
- வங்காளம்,
- ஆங்கிலம்,
- புவியியல்,
- வரலாறு,
- பொருளாதாரம்,
- தத்துவம்,
- சமஸ்கிருதம் மற்றும்
- கல்வி கணக்கியல் [3]
- 2003-2004 ஆண்டிலிருந்து (இளங்கலை வணிக மேலாண்மை)பிபிஏ பாடத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பட்டப்படிப்பைத் தவிர, மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்பதிலும் கல்லூரி சிறப்பு கவனம் செலுத்திவருகிறது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads