நல்லாடை அக்னீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அக்னீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் நல்லாடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பரிகாரத் தலமாக விளங்குகிறது.[1] இக்கோயிலின் மூலவர் அக்னீசுவரர் மற்றும் தாயார் சுந்தரநாயகி ஆவர். இக்கோயில் சுமார் 900 வருடங்கள் பழமையானது ஆகும்.[2]

விரைவான உண்மைகள் நல்லாடை அக்னீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 17.58 மீட்டர்கள் (57.7 அடி) உயரத்தில், (11.0138°N 79.7448°E / 11.0138; 79.7448) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Thumb
நல்லாடை அக்னீசுவரர் கோயில்
நல்லாடை அக்னீசுவரர் கோயில்
நல்லாடை அக்னீசுவரர் கோயில் (தமிழ்நாடு)

புதுப்பித்தல்

900 வருடங்களுக்கு முன்பு இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் கும்பாபிசேகம் 2023 மே மாதம் நடைபெற்றது.[3]

பராமரிப்பு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பு பெற்று அதன் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் இயங்குகிறது.[4]

இதர தெய்வங்கள்

விட்டுணு, மகாலட்சுமி, கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி, புவனேசுவரி, சண்டிகேசுவரர், துர்க்கை, துவார விநாயகர், செல்வ விநாயகர், சோமாஸ்கந்தர், பாலமுருகன், கல்யாணி, சூரியன், சனி, வீரபத்திரர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் வீற்றிருக்கும் மற்ற தெய்வங்கள் ஆவர்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads