நல்லூர் விசுவேசுவரசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசுவேசுவரசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் நல்லூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 338 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விசுவேசுவரசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11.1019°N 77.3923°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் விசுவேசுவரசுவாமி மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இவர்களது சன்னதிகளுடன் பட்டி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீசுவரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், கங்காதேவி மற்றும் சரபேசுவரர் ஆகியோர் சன்னதிகளும் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன. இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாள் நடைபெற்றது.[2][3]
இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads