நாட்டுச்சாலை
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாட்டுச்சாலை என்பது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள[3] [4]ஒரு கிராமம்.
இக்கிராமத்தின் முன்னோர்கள் அந்நாளில் அதிக நாடகங்களை இயற்றி அவற்றை மேடைகளில் நடிப்பார்களாம். இதனால் இக்கிராமத்தின் பெயர் "நாடகச்சாலை" என்றிருந்ததாகவும், இப்பெயர் காலப்போக்கில் மருவி "நாட்டுச்சாலை" எனப் பெயர் உருவாகியது என்று இக்கிராம முன்னோர்களின் கருத்து. முசுகுந்த அரசன் என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் அதனால் இப்பகுதியை முசுகுந்த நாடு என்றும் அழைப்பதும் உண்டு. இக்கிராம மக்கள் உழவுத்தொழிலையே முக்கிய தொழிலாகாக் கொண்டவர்கள்.
Remove ads
இங்குள்ள கோயில்கள்
- பெரமநாத அய்யனார் கோயில்
- முத்துமாரியம்மன் கோயில்
- சிவன் கோயில்
- அம்மனியாயி கோவில்
- இடும்பன் கோவில்
- பிச்சயாயி கோவில்
- சுந்தரி அம்மன் கோவில்
- முனியன் கோவில்
- கருப்பணசுவாமி கோவில்
- வீரனார் கோவில்
இங்குள்ள பள்ளிகள்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- அரசினர் மேல்நிலைப்பள்ளி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads