பட்டணம், கோயம்புத்தூர்

கோயமுத்தூர் மாவட்ட ஊர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எறிவீரப்பட்டணம் என்கிற பட்டணம் (Eriveera Pattanam, Coimbatore) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். [2]

விரைவான உண்மைகள் எறிவீரப்பட்டணம் பட்டணம் சிறப்பு நிலை பேரூராட்சி, நாடு ...

இன்றைக்கு ஒண்டிப்புதுருக்கு கிழக்கே, நீலாம்பூர் அருகில் உள்ள ஊருக்கு பெயர் பட்டணம், அதன்‌ முழுப்பெயர் எறிவீரப்பட்டணம் என்பது. [3]

Remove ads

கொங்கு நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட எறிவீரப்பட்டணங்கள் இருந்துள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாகும்.

"எறிவீர" என்னும் பெயர் மறைந்து தற்போது பட்டணம் என்கிற பெயர் மட்டுமே மிஞ்சி உள்ளது.

முன்பு, வணிகக்குழுக்கள் அரசர், நாட்டார், அல்லது ஊராரின் பாதுகாப்பை நம்பி இருக்காமல், தங்களின் சொந்த வீரர்களின் பாதுகாப்பில் ஏற்படுத்திக்கொண்ட காவல் நகரங்களையே "எறிவீரப்பட்டணம்" என்று குறிப்பிட்டனர். இவை எறிவீரதளம், வீரதாவளம் போன்ற வேறு சில பெயர்களாலும் அழைக்கப்பட்டன.[4]

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5][6]

Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கோயம்புத்தூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சூலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 488 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads