பண்டார் துன் உசேன் ஓன்
மலேசியா புற நகர்ப்பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டார் துன் உசேன் ஓன் (ஆங்கிலம்: Bandar Tun Hussein Onn; மலாய்: Bandar Tun Hussein Onn) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் செராஸ் 11-ஆவது மைலில் (Batu 11 Cheras) உள்ள புற நகரப்பகுதி ஆகும். இது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 13 கி.மீ. தொலைவிலும் காஜாங்கிற்கு வடக்கே 7.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாகவே பண்டார் துன் உசேன் ஓன், ஒரு குடியிருப்பு பகுதி ஆகும்; 1990-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. இங்கு ஒரு எம்ஆர்டி தொடருந்து நிலையம் (MRT Bandar Tun Hussein Onn) உள்ளது.[1]
Remove ads
பொது
பண்டார் துன் உசேன் ஓன் நகரத்தின் மேம்பாட்டாளர்கள் உடா ஓல்டிங்சு நிறுவனத்தார் (UDA Holdings Bhd) ஆகும். இந்த நிறுவனம் 1971-இல் மலேசிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. 1989ஆம் ஆண்டில், செராஸ் பகுதியில் 752 ஏக்கர் (304 எக்டேர்) நிலத்தை கையகப்படுத்தி பண்டார் துன் உசேன் ஓன் நகரத்தை உருவாக்கியது.[2]
தெற்கு செராஸ் பகுதியில் மிகப்பெரிய வீட்டு மனைத் திட்டமாக அறியப்படுகிறது. இங்கு 6,000 குடியிருப்பு மனைகள் உள்ளன; மொத்த மக்கள் தொகை 35,000 ஆக உள்ளது.
Remove ads
தொடருந்து நிலைய காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads