பரங்கிமலை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரங்கிமலை தொடருந்து நிலையம் (St. Thomas Mount), சென்னையின் உள்ளூர் தொடருந்து நிலையங்களில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம். இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், நகர இணைப்பு சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

Remove ads
ஒருங்கிணைந்த மெட்ரோ தொடருந்து நிலையம்
பரங்கிமலை மெட்ரோ தொடருந்து நிலையம் சென்னை மெட்ரோ - MRTS - சென்னை புறநகர் தொடருந்து ஆகிய சேவைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த நிலையம் ஆகும்.[1]
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, பரங்கிமலை தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 14.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9][10]
Remove ads
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads