பாலகும்மி சாய்நாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலகும்மி சாய்நாத் (பிறப்பு 1957), கிராமப்புற செய்திகளை வெளிக்கொணரும் ஓர் இந்திய இதழியலாளர். இவர் 2007ஆம் ஆண்டு இதழியல், இலக்கியம், ஆக்கமுள்ள தொடர்பியல் குறித்த மக்சேசே பரிசு பெற்றவர். இந்தியாவில் உலகமயமாதலால் ஏற்படும் விளைவுகளையும் வறுமை, விவசாயிகளின் தற்கொலைகளின் ஏறுமுகத்தின் பின்னணி, கிராமங்களில் நிலவும் சமூகச் சிக்கல்கள் போன்றவை குறித்து ஒளிப்படங்களுடன் எழுதும் கட்டுரைகளுக்காகப் புகழ் பெற்றவர். ஆண்டொன்றில் 270 முதல் 300 நாட்கள் கிராமங்களில் தங்கி 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். த இந்து ஆங்கில நாளிதழின் கிராமப்புறச் செய்தியாசிரியர், இந்தியா டுகெதர் என்ற இதழின் பத்தி எழுத்தாளர்.[1]. இவரது பணி நோபல் பரிசு பெற்ற அமார்த்ய சென்னிடம் இருந்து "பசி, பஞ்சம் குறித்த உலக வல்லுனர்களில் ஒருவர்" என்ற பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.[2]
Remove ads
இளமை வாழ்வு
சாய்நாத் ஆந்திராவின் புகழ்பெற்றக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். முன்னாள் குடியரசுத் தலைவர் வி. வி. கிரியின் பேரன் ஆவார்.[3] சென்னையிலுள்ள லயோலாக் கல்லூரியில் படித்து பின்னர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அக்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் செயற்திறனாளர்களுடன் ஒன்றாக இருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் செயற்குழு உறுப்பினராக தொடர்கிறார். வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றபின்பு 1980ஆம் ஆண்டு யுனைடைட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகத் தம் பணிவாழ்வைத் துவங்கினார். அந்நிறுவனத்தில் தமது பணிக்காக உயரிய பரிசுகளை வென்றவர். மும்பையிலிருந்து வெளியான பிளிட்ஸ் வார இதழில் பணியாற்றினார். முதலில் வெளிநாட்டுச் செய்தியாசிரியராகவும் பின்னர் துணை ஆசிரியராகவும் பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். பதினைந்து ஆண்டுகளாக சென்னையிலுள்ள இதழியலிற்கான ஆசியக் கல்லூரி (Asian College of Journalism), சோஃபியா பலதொழில்நுட்பப் பயிலகத்தின் சமூகத் தொடர்பியல் ஊடகக் கல்வித்துறையின் வருகை விரிவுரையாளராக உள்ளார்.
Remove ads
ஆக்கங்கள்
- Everybody Loves a Good Drought: Stories from India's Poorest Districts, பென்குயின் புத்தகங்கள், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-025984-8
- வலைப்பதிவு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads