புராணசிங்கபாளையம் திரௌபதியம்மன் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

புராணசிங்குபாளையம் திரௌபதியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலானது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில், புதுச்சேரி மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ள புராணசிங்குபாளையம் (பி. எஸ். பாளையம்) என்னும் ஊரில் உள்ள அம்மன் கோயிலாகும்.[1] இங்கு வசிக்கும் வன்னிய குல மக்களின் குலதெய்வமாக திரௌபதியம்மன் கோவில் உள்ளது.

விரைவான உண்மைகள் அருள்மிகு திரௌபதியம்மன் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் பாண்டவர்களின் மனைவி திரௌபதியம்மன் சன்னதியும், போத்தராசா, விநாயகர், ஐயப்பன் மற்றும் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மகாபாரத நிகழ்வுகளை நினைவுகொள்ளும் வகையில் அரக்குமாளிகை எரிப்பு, பகாசூரனுக்கு பீமன் உணவு வழங்குதல் மற்றும் வதம் செய்தல், கிருஷ்ணரின் தலைமையில் அருச்சுனன்-திரௌபதி திருகல்யாணவைபோகம், கிருஷ்ணரின் கருடவாகன சேவை, விஸ்வரூப சேவை, குதிரைவாகன சேவை, மஞ்சள்நீராட்டு ,அரவான் பலி போன்ற திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றது. பத்து நாட்கள் புராணசிங்குபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads