பெரியேரி, துரிஞ்சிகுப்பம்
தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்ட கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியேரி கிராமம் (Periyeri Village), தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாக அமைந்துள்ளது. இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 388 ஆகும். இவர்களில் பெண்கள் 185 பேரும் ஆண்கள் 203 பேரும் உள்ளனர். 457 பேர் மக்கள்தொகை கொண்டது பெரியேரி கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் 5 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும்.
Remove ads
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த பெரியேரி கிராமம். இந்த கிராமத்திலிருந்து துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி மற்றும் போளூருக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
சிறப்புகள்
இந்த கிராமத்தில் மூன்று புறமும் ஜவ்வாது மலை காடுகளால் சூழப்பட்டுள்ளது. இயற்கை மணம் கொஞ்ச விவசாய நிலங்கள் மூலமும் அமைந்துள்ளது.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads