பொல்லினேனி மலைப்பகுதி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொல்லினேனி மலைப்பகுதி (Bollineni Hillside) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த நகரியமாகும். இராச்சீவ் காந்தி சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் இப்பகுதி பரந்து விரிந்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு வரிசையில் வீடுகள் மற்றும் இயற்கையான சூழலில் அமைந்துள்ள தோட்ட வீடுகள் உள்ளன.[1]
பொல்லினேனி மலைப்பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு சுமார் ஆறு மில்லியன் சதுர அடி குடியிருப்பு இடத்தைக் கொண்டிருக்கும். இது பல்வேறு வருமானக் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சுமார் 4500 குடியிருப்பு அலகுகளுக்கு இடமளிக்கும்.[2]
Remove ads
அமைவிடம்
பொல்லினேனி மலைப்பகுதி நூக்காம்பாளையம் பஞ்சாயத்தில் இராச்சீவ் காந்தி சாலையிலிருந்து அதாவது ஓஎம்ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை) அருகே அமைந்துள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் மிக அருகில் உள்ள அடையாளமாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads