வருக்கமாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வருக்கமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் மொழியில் முதலில் வரும் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது வருக்கமாலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
இந்த முறையில் அகப்பொருள் பாடல்கள் அமையின் அது வருக்கக் கோவை எனப்படும்.
Remove ads
நூல்கள் எடுத்துக்காட்டும் பாங்கும்
வருக்கமாலை நூல்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நன்கு அறிமுகமான மூன்று நூல்களின் வழி அறியலாம். இவ்வகையில் தோன்றியுள்ள வேறு சில நூல்களும் உள்ளன.
- ஆத்தி சூடி - அறம்செய விரும்பு. ஆறுவது ணினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். ... (இருசீர் வருக்கம்)
- கொன்றை வேந்தன் - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஈயார் தேட்டை தீயா கொள்வர். ... (நாற்சீர் வருக்கம்)
- பாரதியார் புதிய ஆத்தி சூடி - அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய். ... (இருசீர் வருக்கம்)
இன்னும் காண்க
- நமசிவாய மாலை - (அறுசீர்க்கண்ணி வருக்கம்)
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads