கிண்ணிகண்ணன்விளை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கிராமம்கிண்ணிகண்ணன்விளை (Kinnikannanvilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். தெற்கில் முகிலன்குடியிருப்பும், வடக்கில் கோவில்விளை என்ற கிராமமும், கிழக்கில் பொழியூர் என்ற கிராமமும் மேற்கில் அரபிக்கடலும் இவ்வூருக்கு எல்லைகளாக அமைந்துள்ளன. கிண்ணிகண்ணன்விளை கன்னியாகுமரியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சாமித்தோப்பு மற்றும் சுசீந்திரம் முறையே இங்கிருந்து சுமார் 4 கி.மீ மற்றும் 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
Read article
