அசோகாவதானம்
From Wikipedia, the free encyclopedia
அசோகாவதானம் (Aśokāvadāna; சமக்கிருதம்: अशोकावदान) இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்நூல், அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகர் பௌத்த சமயத்தை ஆதரித்து, வளர்த்து, பரத கண்டத்திலும், பரத கண்டத்தின் வெளியே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கிலும் பௌத்தத்தை பரப்பிய வரலாறும், பௌத்த பிக்குகள், இல்லற உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பௌத்த நெறிகளையும் குறித்து பாறைக் கல்வெட்டுகளிலும், குகைகளிலும், தூபிகளிலும் அரசாணையாக வெளியிட்டதைக் குறித்து விவரிக்கிறது.[1]
நூலாசிரியர் | மதுராவின் பிக்குகள் |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | ஜான் எஸ். ஸ்டிராங் |
நாடு | மௌரியப் பேரரசு |
மொழி | சமசுகிருதம் |
தொடர் | திவ்வியவதனம் |
பொருண்மை | அசோகரின் வாழ்க்கை |
வகை | வரலாற்று நூல் |
ஆங்கில வெளியீடு | 1983, ஜான் ஸ்டிராங்கின் மொழிபெயர்ப்பு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அச்சகம் |
ISBN | 9788120806160 |
OCLC | 9488580 |
அசோகாவதானம் எனும் நூல் மதுரா பகுதியில் இருந்த பௌத்த பிக்குகளால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டதாகும். பேரரசர் அசோகர் பௌத்த சமயத்தை பரப்பிய வரலாற்றையும், மதுராவையும், மதுரா பகுதியின் பௌத்த விகாரைகளையும், பிக்குகளின் பெருமைகளையும் இந்நூல் விளக்குகிறது. [2][3] அசோகவர்தனன் என்றும் அழைக்கப்படும் இந்நூலை சீன பௌத்த அறிஞராக பாசியான் என்பவர் கிமு 300ல் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். கிபி 500ல் ஆ-வு-வாங் எனும் பெயரில் சீன மொழியில் இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது. [4]. 1923ல் ஜீன் பிர்சிலுஸ்கி என்பவரால் பிரான்சு மொழியிலும், 1983ல் ஜான் எஸ். ஸ்டிராங் என்பவரால் ஆங்கிலத்திலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது.
அசோகாவதானம் நூலிற்கு, இராஜேந்திர லாலா மித்திரர் (1822–91) என்பவர் சமசுகிருத மொழியில் விளக்க உரை எழுதியுள்ளார். [5]