ஆரி பாட்டர்
From Wikipedia, the free encyclopedia
ஆரி பாட்டர் என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்பாகும்.
ஆரி பாட்டர் சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம். | |
| |
ஆசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
வகை | கனவுருப் புனைவு, நாடகம், இள வயதுவந்தோர் கற்பனைகள், சாகசம், பயங்கரம், மந்திர தந்திரம் |
வெளியீட்டாளர்கள் | புலூம்சுபெரி பப்ளிசிங் (ஐ.இ) ஆர்தர் ஏ. லீவின் புக்சு (ஐ.அ.நா.) |
வெளியீடு | 26 சூன் 1997 – 21 சூலை 2007 (initial publication) |
ஊடக வகை | பதிப்பு (hardback & paperback) Audiobook மின்னூல் (as of மார்ச்சு 2012[update])[1] |
புதின எண்ணிக்கை | 7 |
ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் பயிலும் ஆரி பாட்டர் (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான ரோன் வீசுளி (Ronald Weasley) மற்றும் எர்மாயினி கிறேஞ்செர் (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.
இத்தொடரின் கதைக்கருவானது, மந்திரவாத உலகத்தை வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஆரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட இலோர்டு வோல்டெமோர்ட் (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஆரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
சூன் 30, 1997இல் இத்தொடரின் முதல் புதினமான ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிடைத்தது. சூலை 2013 நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் இறுதிப் புதினமானது வெளிவந்த 24 மணிநேரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது.
இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய பள்ளிக்கூடக் கதையியல், மர்மம், திகில், சாகசம், காதல், மரணம், பாகுபாடு, ஊழல் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.