ஆர். நடராஜ முதலியார்
இந்திய திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
ரங்கசுவாமி நடராஜ முதலியார் (Rangaswamy Nataraja Mudaliar, 1885 – மே 3, 1971) தமிழகத் திரைப்படத்துறையின் தந்தை என அறியப்படுபவரும்,[1] ஊமைத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாகவும் இருந்தவர். தென்னிந்தியாவின் முதலாவது ஊமைப்படமான கீசக வதம் திரைப்படத்தை 1917 இல் தயாரித்து, இயக்கி வெளியிட்டார். தொடர்ந்து திரௌபதி வஸ்திராபகரணம் (1918), லவ குசா (1919), ருக்மணி சத்யபாமா, மயில் ராவணா ஆகிய ஒலியில்லாத் திரைப்படங்களைத் தனது "இந்தியா பிலிம் கம்பனி" என்ற நிறுவனத்தினூடாகத் தயாரித்து வெளியிட்டார்.[2]
விரைவான உண்மைகள் ரங்கசுவாமி நடராஜ முதலியார், பிறப்பு ...
ரங்கசுவாமி நடராஜ முதலியார் | |
---|---|
ஆர். நடராஜ முதலியார் | |
பிறப்பு | 1885 வேலூர், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | மே 3, 1971 (அகவை 85–86) |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் |
அறியப்படுவது | தென்னிந்தியாவில் முதல் திரைப்படத்தைத் தயாரித்தவர் |
மூடு