கீசக வதம்
ஆர். நடரா ஜ முதலியார் இயக்கத்தில் 1916-18இல் வெளியான ஊமைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கீசக வதம் (Keechaka Vadham) தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படமாகும். 1918ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை, ஆர். நடராஜ முதலியார் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் ஊமைத் திரைப்படமும் ஆகும். 1917-ஆம் ஆண்டு ஐந்து வாரங்களுக்கு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டன, பின்னர் 1918-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
கீசக வதம் | |
---|---|
இயக்கம் | ஆர். நடராஜ முதலியார் |
தயாரிப்பு | ஆர். நடராஜ முதலியார் |
கதை | சி. ரங்கவடிவேலு |
நடிப்பு | ராஜ முதலியார் ஜீவரத்தினம் |
ஒளிப்பதிவு | ஆர். நடராஜ முதலியார் |
படத்தொகுப்பு | ஆர். நடராஜ முதலியார் |
விநியோகம் | இந்தியா பிலிம் கம்பனி |
வெளியீடு | 1916—1918[lower-alpha 1] |
நாடு | இந்தியா |
மொழி | ஊமைப்படம் (குறிப்புகளுடன்) |
ஆக்கச்செலவு | ₹35,000[3] |
மொத்த வருவாய் | ₹50,000[4] |
இத்திரைப்படம் ஓர் ஊமைத் திரைப்படமாக இருந்தாலும், இதில் நடித்தவர்கள் பெரும்பாலும் தமிழ் நடிகர்களே. எனவே, இத்திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படமாகக் கருதப்படுகிறது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், இத்திரைப்படத்தைச் சேர்ந்த எந்தவொரு அச்சுகளும் கிடைக்கப்பெறவில்லை. இத்திரைப்படம் ஒரு தொலைந்து போன திரைப்படமாகி விட்டது.