இரண்டாம் அஜிசிலேயஸ்
எசுபார்த்தாவின் மன்னர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் அஜிசிலேயஸ் (Agesilaus II, கிரேக்கம்: Ἀγησίλαος Agesilaos ; ஆட்சிக் காலம் கி.மு. 442 – 358 ) என்பவர் எசுபார்த்தாவின் அரசராக கி.மு. 399 முதல் 358 வரை இருந்தவர். பொதுவாக எசுபார்த்தாவின் வரலாற்றில் மிக முக்கியமான மன்னராக இவர் கருதப்படுகிறார். பெலோபொன்னேசியப் போரைத் தொடர்ந்து (கிமு 431-404) ஏற்பட்ட எசுபார்த்தன் மேலாதிக்கத்தின் போது அஜெசிலேயஸ் முக்கிய பாத்திரம் வகித்தார். போரில் துணிச்சலான செயல்களில் ஈடுப்பட்ட போதிலும், எசுபார்த்தாவின் உயர்ந்த நிலையைப் பாதுகாப்பதற்கான இராசதந்திர திறன்களை அஜிசிலேயஸ் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக அதிகரித்துவந்த தீப்சின் சக்திக்கு எதிராக, கிமு 371 இல் லியூக்ட்ராவில் நடந்த போரில் எசுபார்த்த தோல்வியுற்ற பிறகு அது கிரேக்கத்தின் இரண்டாம் நிலை சக்தியாக குறைந்து போனது.
இரண்டாம் அஜிசிலேயஸ் | |
---|---|
எசுபார்த்தாவின் மன்னர் | |
ஆட்சிக்காலம் | சு. கிமு 399 – 358 |
முன்னையவர் | இரண்டாம் அகிஸ் |
பின்னையவர் | மூன்றாம் ஆர்க்கிடாமஸ் |
பிறப்பு | சு. கிமு 442 எசுபார்த்தா |
இறப்பு | கிமு 358 (சுமார் 84 வயதில்) சிரேனைக்கா |
துணைவர் | கிளியோரா |
குழந்தைகளின் பெயர்கள் | மூன்றாம் ஆர்க்கிடாமஸ் |
Greek | Ἀγησίλαος Agesilaos |
அரசமரபு | யூரிபோன்டிட் |
தந்தை | இரண்டாம் ஆர்க்கிடாமஸ் |
தாய் | யூபோலியா |
Military service | |
போர்கள்/யுத்தங்கள் | கொரிந்தியப் போர் ● கொரோனியா சமர் பொயோட்டியன் போர் |
அஜிசிலேயசின் ஆட்சியானது குறிப்பாக கிமு 411 முதல் 362 வரையிலான ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாறானது, கிரேக்கத்தின் ( ஹெலனிகா ) பெரும் வரலாற்றை எழுதிய அவரது நண்பர் செனபோனின் படைப்புகளால் நன்கு அறியப்படுகிறது. அதில் அஜிசிலேயசின் ஆட்சி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. செனபோன் அவரது நண்பரான அஜிசிலேயசின் வாழ்க்கை வரலாற்றையும் இயற்றினார். ஒருவேளை அஜிசிலேயசுக்கு எதிராகக முன்வைக்கபட்ட விமர்சனங்களிலிருந்து காத்து அவரது பெருமையை காட்டும் விதமாக இருக்கலாம். மேலும், புளூட்டாக் தனது பேர்லல் லிவ்ஸ் என்ற நூலில் அஜெசிலேயசின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இதில் செனபோனால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட பல கூறுகள் உள்ளன.