இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் பாலியல் வன்முறைகள்
From Wikipedia, the free encyclopedia
இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் பாலியல் வன்முறைகள் என்பது ஈழப் போரின் போது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல தரப்பான இலங்கைப் பாதுகாப்பு தரப்பினராலும் திட்டமிட்ட முறையில் பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது ஆகும். பாலியல் வன்முறைகள் தொடர்பான பல அமைப்புகளினாலும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணையும் இதனை வெளிகொணர்ந்துள்ளது. "இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்குவர்." அந்த அறிக்கை " பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகளல்ல, அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாகின்றது." என்று குறிப்பாடச் சுட்டிக்காட்டுகின்றது.[1] மேலும் இந்த வன்முறைகளுக்காக ஒருவர் கூட இன்றுவரை சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை..[2]
ஈழப் போராட்ட காரணங்கள் |
---|