இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
From Wikipedia, the free encyclopedia
இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளைவான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். கடந்த இரு வருடங்களில் இலங்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணாமல் போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. [தொடர்பிழந்த இணைப்பு] காணாமல் போவதற்கு அரசே காரணம் என பல காணாமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயற்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையங்கள் சரிவர தமது வேலையை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி இலங்கையில் இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி ஒர் அறிக்கை சமர்பித்துள்ளார்.
ஈழப் போராட்ட காரணங்கள் |
---|