கலி. பூங்குன்றன்
From Wikipedia, the free encyclopedia
கலி. பூங்குன்றன் (பிறப்பு: 15 ஆகஸ்டு 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் மற்றும்விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியரும் ஆவார்.'மின்சாரம்' என்னும் பெயரில் இவர் விடுதலையில் எழுதும் கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை ஆகும்.ஓய்வு ஊதியம் பற்றி எல்லாம் கவலைப்படாமல்,அரசாங்க வேலையை விட்டுவிட்டு,திராவிடர் கழகத்தில் முழு நேரமாகப் பணியாற்ற வந்தவர்.கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலையின் பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றுபவர்."தகவல் களஞ்சியம்" எனத் தோழமைக் கட்சித்தலைவர்களால் அழைக்கப்படுபவர்.கவிஞர் கலி. பூங்குன்றன் தனக்கு அடுத்து திராவிடர் கழகத்தின் தலைவராக செயல்படுவார் எனத் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி தஞ்சாவூரில் 23 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.[1]
கலி. பூங்குன்றன் | |
---|---|
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிடர் கழகம் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு |
இணையத்தளம் | http://www.dravidarkazhagam.org |