காத்மாண்டு சமவெளி
நேபாளத்தில் உள்ள ஒரு சமவெளி / From Wikipedia, the free encyclopedia
காத்மாண்டு சமவெளியில் (Kathmandu Valley) (நேபாளி: काठमाडौं उपत्यका, நேபாளத்தின் தேசியத் தலைநகரமாக காட்மாண்டு நகரம் உள்ளது. பல பண்பாடு, வரலாறு, இயற்கைச் சின்னங்கள் கொண்ட காத்மாண்டு சமவெளியில் புகழ் பெற்ற இந்து மற்றும் பௌத்தக் கோயில்களும், தேசியப் பூங்காக்களையும் கொண்டுள்ளது. காத்மாண்டு சமவெளியில் ஏழு உலகப் பாரம்பரியக் களங்கள் உள்ளது. [1]
நேபாளத்தில் காத்மாண்டு சமவெளி மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் கொண்டது. காத்மாண்டு சமவெளி காத்மாண்டு மாவட்டம், லலித்பூர் மாவட்டம், சித்வான் மாவட்டம், பக்தபூர் மாவட்டம் என நான்கு மாவட்டங்களையும், காட்மாண்டு, லலித்பூர், பரத்பூர், வீரகஞ்ச் என நான்கு மாநகராட்சிகளையும் கொண்டுள்ளது.
தற்கால நேபாள அரசின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் காத்மாண்டு சமவெளியில் உள்ளதால், நேபாளத்தின் பொருளாதார மையமாக விளங்குகிறது. ஏப்ரல், 2015ல் காத்மாண்டு சமவெளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சிதைந்தது.[2]மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். இந்நிலநடுக்கத்தால் காத்மாண்டு சமவெளியின் உள்கட்டமைப்புகள் சீர்குலைந்தது.