குரு தட்சணை
From Wikipedia, the free encyclopedia
குரு தட்சணை அல்லது குரு காணிக்கை என்பது குருகுலத்தில் கல்வி கற்று முடித்த சீடர்கள், குருவிற்குத் தங்கம் போன்ற அணிகலன்களாகவோ, தானியமாகவோ அல்லது பசு போன்ற கால்நடைகளாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குருவிற்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கையாகும்.[1][2] [3] ஒரு சீடன் குருவிற்கு குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.