![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/%25E0%25AE%25AE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE_1207.png/640px-%25E0%25AE%25AE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE_1207.png&w=640&q=50)
கெரயிடுகள்
From Wikipedia, the free encyclopedia
கெரயிடுகள் (மொங்கோலியம்: Хэрэйд) என்பவர்கள் கி.பி. 12ம் நூற்றாண்டில் அல்தை சவன் பகுதியிலிருந்த ஐந்து முக்கியமான துருக்கிய[1] அல்லது துருக்கிய-மங்கோலிய பழங்குடியின[2][3] கூட்டமைப்பினரில் (கானேடு) ஒருவர் ஆவர். இவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசுதோரியக் கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஐரோப்பாவின் பிரஸ்தர் ஜான் என்ற புராணக் கதாபாத்திரம் இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கெரயிடுகள் Хэрэйд (கெரேயிட்) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
11ம் நூற்றாண்டு–13 ம் நூற்றாண்டு | |||||||||||
![]() | |||||||||||
நிலை | குடிமக்களாக: லியாவோ அரசமரபு, காரா கிதை, செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் கீழ் | ||||||||||
சமயம் | நெசுத்தோரியக் கிறித்தவம் | ||||||||||
அரசாங்கம் | கானேடு | ||||||||||
கான் | |||||||||||
• 11ம் நூற்றாண்டு | மர்குஸ் புய்ருக் கான் | ||||||||||
• 12ம் நூற்றாண்டு | சரைக் கான் | ||||||||||
• 12ம் நூற்றாண்டு | குர்சகுஸ் புய்ருக் கான் | ||||||||||
• –1203 | தொகுருல் கான் (கடைசி) | ||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக் காலம் | ||||||||||
• தொடக்கம் | 11ம் நூற்றாண்டு | ||||||||||
13 ம் நூற்றாண்டு | |||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | உறுதிப்படுத்தப்படாதது: அர்கின், கிரே |
இவர்கள் ஆண்ட பகுதியானது விரிவானது ஆகும். அது தற்கால மங்கோலியா முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. வசிலி பர்தோல்த் (1913) என்ற வரலாற்றாசிரியர் இவர்கள் ஆனன் மற்றும் கெர்லென் ஆறுகளின் மேல் பகுதியில் தூல் ஆற்றின் அருகிலே இருந்ததாகக் கூறுகிறார்.[4] இவர்கள் 1203ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டனர். மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியிலே செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். 13ம் நூற்றண்டில் துருக்கிய-மங்கோலிய கானேடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.