சத்தியேந்திர நாத் போசு
இந்திய இயற்பியலாளர் மற்றும் பல்துறை வித்தகர். / From Wikipedia, the free encyclopedia
சத்தியேந்திர நாத் போசு (Satyendra Nath Bose, வங்காளம்: সত্যেন্দ্র নাথ বসু, 1 சனவரி 1894 - 4 பெப்ரவரி 1974) இந்திய இயற்பியலாளர் ஆவார்.[1] மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சத்தியேந்திர நாத் போசு, பிறப்பு ...
சத்தியேந்திர நாத் போசு | |
---|---|
சத்தியேந்திர நாத் போசு | |
பிறப்பு | (1894-01-01)1 சனவரி 1894 கோல்கத்தா, இந்தியா |
இறப்பு | 4 பெப்ரவரி 1974(1974-02-04) (அகவை 80) கொல்கத்தா, இந்தியா |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் தாக்கா பல்கலைக்கழகம் அறிவியல் பல்கலைக்கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | பிரசிடென்சி கல்லூரி |
அறியப்படுவது | போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல், போசு வளிமம் |
மூடு