சனகர்
From Wikipedia, the free encyclopedia
சனகர் (Janaka) என்பவர் மிதிலாபுரி என்கிற நாட்டின் அரசனாவார். இவர் மனைவியின் பெயர் சுனைனா. இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்த இராசரிசி ஆவார். இவர் இராமாயணக் காவிய நாயகி சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். அத்துடன் இலட்சுமணனின் மனைவியான ஊர்மிளாவின் தந்தையும் இவரே. சனகரின் மகள் என்பதாலேயே சீதைக்கு ஜானகி என்ற பெயர் கிடைத்தது. சனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள்.[1]
விரைவான உண்மைகள் சனகர், பெற்றோர்கள் ...
சனகர் | |
---|---|
இராமர் மற்றும் தசரதனை மிதிலைக்கு வரவேற்கும் சனகர் | |
பெற்றோர்கள் | ஹரஸ்வரோமன் (தந்தை), கைகேசி (தாய்) |
சகோதரன்/சகோதரி | குசத்துவஜன் |
குழந்தைகள் | சீதை, ஊர்மிளா (மகள்கள்) |
நூல்கள் | இராமாயணம், உபநிடதங்கள் |
சமயம் | மிதிலா புரி |
மூடு