சுரேஷ்வரர்
From Wikipedia, the free encyclopedia
சுரேஷ்வரர் அல்லது சுரேஷ்வராச்சாரியார் (Sureśvara or Sureśvarācārya), கி. பி. 750இல் வாழ்ந்த அத்வைத வேதாந்தாதி. இவரின் இயற்பெயர் மந்தன மிஸ்ரர். ஆதிசங்கரரின் தலைமைச் சீடர். சங்கரரின் ஆணைப்படி சிருங்கேரியில் சாரதா பீடம் அமைத்து, அதன் முதல் பீடாதிபதியானவர். சுரேஷ்வரர் சங்கரரை விட வயதில் மூத்தவராகவும் இல்லறத்தவராகவும் இருந்தவர்.