தோடகர்
From Wikipedia, the free encyclopedia
தோடகர் அல்லது தோடகாச்சாரியார் (Totakacharya) (IAST Toṭakācārya) கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. இவரது இயற்பெயர் ஆனந்தகிரி. ஆதிசங்கரரைத் தனது குருவாகக் கொண்டவர். இந்தியாவின் வடக்கில் இமயமலையில் பத்ரிநாத் அருகே அதர்வண வேதத்திற்குரிய ஜோஷி மடத்தை நிறுவி அதன் முதல் மடாதியாக விளங்கியவர். இவர் தனது குரு, ஆதிசங்கரரின் பெருமைகள் குறித்து எட்டு சுலோகங்களில் பாடிய தோடகாஷ்டகம் எனும் நூல் சிறப்பு பெற்றது.