செலூக்கியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
செலுசிட் பேரரசு அல்லது செலூக்கியப் பேரரசு (Seleucid Empire) (/sɪˈljuːsɪd/;[8] பண்டைக் கிரேக்கம்: Βασιλεία τῶν Σελευκιδῶν, Basileía tōn Seleukidōn) (ஆட்சிக் காலம்: கி.மு. 312 - கி.மு. 63) என்பது செலூக்கிய வம்சத்தினரால் ஆளப்பட்டப் பேரரசாகும். பேரரசர் அலெக்சாண்டரின் ஆசியப் படையெடுப்பிற்குப் பின் தெற்காசியா, நடு ஆசியா மற்றும் மேற்காசியாவின் பகுதிகளை கி.மு. 312 முதல் கி.மு. 63 முடிய கிரேக்கப் போர்ப்படைத் தலைவர் செலூக்கசு நிக்காத்தர் முதல், பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் பிலிப்பு வரை 375 ஆண்டுகள் ஆண்டனர்.[9]
செலூக்கியப் பேரரசு Βασιλεία τῶν Σελευκιδῶν | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு. 312–கிமு. 63 | |||||||||||||||||||
தலைநகரம் | செலூசியா (கி.மு. 305–240) அந்தியோக்கியா (கி.மு. 240–63) | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | கிரேக்கம்(அலுவல் மொழி)[5] பாரசீகம் அரமேயம்[5] | ||||||||||||||||||
சமயம் | பண்டைய கிரேக்க சமயம் பாபிலோனிய சமயம் [6] சரத்துஸ்திர சமயம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
பேரரசர் | |||||||||||||||||||
• கி.மு. 305–281 | முதலாம் செலூக்கசு நிக்காத்தர் (கி.மு. 305 – கி.மு. 281 ) (முதல்) | ||||||||||||||||||
• கி.மு. 65–63 | இரண்டாம் பிலிப்பு (இறுதி) | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• அலெக்சாண்டர் வென்ற பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள் ஆளுதல் | கிமு. 312 | ||||||||||||||||||
• இப்சுஸ் போர் | கி.மு. 301 | ||||||||||||||||||
• உரோம் - செலூக்கியப் போர் | கி.மு. 192–188 | ||||||||||||||||||
• அபாமியா உடன்படிக்கை | கி.மு. 188 | ||||||||||||||||||
• யூதர்களின் மெச்சாபியான் கிளர்ச்சி | கி.மு. 167–160 | ||||||||||||||||||
கிமு. 63 | |||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||
கி.மு. 301 [7] | 3,000,000 km2 (1,200,000 sq mi) | ||||||||||||||||||
கி.மு. 240 [7] | 2,600,000 km2 (1,000,000 sq mi) | ||||||||||||||||||
கி.மு. 175 [7] | 800,000 km2 (310,000 sq mi) | ||||||||||||||||||
கி.மு. 100[7] | 100,000 km2 (39,000 sq mi) | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
அலெக்சாண்டர் பஞ்சாப் மன்னர் போரசுடனான போரில் வென்று, மீண்டும் கிரேக்கத்திற்கு திரும்பும் வழியில் பாபிலோனில் மறைந்த பின், அலெக்சாண்டர் வென்ற பகுதிகளை அவரது படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவரான செலூக்கஸ் நிக்காத்தர், கிரேக்கத்திற்கு கிழக்கில் அமைந்த ஆசியப் பகுதிகளுக்கு கி.மு. 312 முதல் பேரரசர் ஆனார்.