தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)
From Wikipedia, the free encyclopedia
தஞ்சாவூர் மாவட்டம் (Tanjore District) என்பது பிரித்தானிய இந்தியாவில் சென்னை மாகாணத்தின் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இது தற்போதைய தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் ஆகிய மாவட்டங்களையும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வட்டத்தையும் உள்ளடக்கியது. தஞ்சாவூரானது இந்து சமய மரபுவழியைத் தாங்கியதாக மட்டுமல்லாது, சோழ கலாச்சார பாரம்பரியத்தின் மையமாகவும், சென்னை மாகாணத்தின் பணக்கார, மிக வளமான மாவட்டங்களில் ஒன்றாகவும் இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் | |||||
மாவட்டம் (சென்னை மாகாணம்) | |||||
| |||||
கொடி | |||||
தலைநகரம் | நாகப்பட்டினம் (1799-1845) தரங்கம்பாடி (1845-1860) தஞ்சாவூர் (1860-1950) | ||||
வரலாறு | |||||
• | மாவட்டத்தை நிறுவுதல் | 1799 | |||
• | நவீன தஞ்சாவூர் மாவட்டம் | 1950 | |||
1799 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மராத்திய ஆட்சியாளரான இரண்டாம் சரபோஜி தனது இராச்சியம் முழுவதையும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தபோது தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. காவிரி வடிநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டமானது, தென்னிந்தியாவில் மிகப்பெருமளவில் நெல் விளையும் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. இது 1876-78 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை மாகாண பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்படவில்லை.