நேபாள பொதுவுடமைக் கட்சி
நேபாளத்தில் அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
நேபாள பொதுவுடமைக் கட்சி (Nepal Communist Party - NCP), கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் என இரண்டு பொதுவுடமைக் கட்சிகளும் காட்மாண்டு நகரத்தில் 17 மே 2018 அன்று (வியாழக்கிழமை) ஒன்றாக இணைந்ததன் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. [2][3] [4]
நேபாள பொதுவுடமைக் கட்சி | |
---|---|
நேபாள பொதுவுடமைக் கட்சி नेपाल कम्युनिष्ट पार्टी | |
சுருக்கக்குறி | NCP (नेकपा) |
தலைவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி மற்றும் பிரசந்தா |
பொதுச் செயலாளர் | விஷ்ணு பிரசாத் பௌதெல் |
Presidium | ஆட்சி மன்றக் குழு |
Spokesperson | நாராயணன் கஜி சிரேஸ்தா |
நாடாளுமன்றக் கட்சித் தலைவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி[1] |
தொடக்கம் | 17 மே 2018; 5 ஆண்டுகள் முன்னர் (2018-05-17) |
இணைந்தவை | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் |
தலைமையகம் | காட்மாண்டு, நேபாளம் |
மாணவர் அமைப்பு | அனைத்து நேபாள தேசிய மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | அனைத்து நேபாள இளைஞர் அணி |
அனைத்து நேபாள தொழிலாளர் அணி | அனைத்து நேபாள பொதுவுடமை தொழிலாளர்கள் சங்கம் |
கொள்கை | சோசலிசம் |
அரசியல் நிலைப்பாடு | மிதமான இடதுசாரி அரசியல் |
நிறங்கள் | சிவப்பு |
பிரதிநிதிகள் சபை (கீழவை) | 174 / 275 |
தேசிய சபை (மேலவை) | 42 / 59 |
தேர்தல் சின்னம் | |
Cpnuml-electionsymbol2064.PNG | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www www |
புதிய கட்சியின் தேசியத் தலைவர்களாக நேபாள பிரதம அமைச்சர் கட்க பிரசாத் சர்மா ஒளி மற்றும் பிரசந்தா இருப்பர். புதிய நேபாள பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக கட்க பிரசாத் சர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [5]
புதிய கட்சியில் பிரசந்தாவுக்கு அடுத்து மாதவ் குமார் நேபாள் மற்றும் சாலா நாத் கனால் ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருப்பர்.
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் கட்சிகளை கலைத்த பிறகு, புதிய நேபாள பொதுவுடமைக் கட்சியை, நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் தொழிலாளர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
மாநில, மாவட்ட, நகரங்கள் அளவிலான நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவர்.