கடைசி முகலாயப் பேரரசர் From Wikipedia, the free encyclopedia
அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.
அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر | |
---|---|
இறுதி முகலாயப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | 28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857 |
முன்னையவர் | இரண்டாம் அக்பர் சா |
பின்னையவர் | முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது வழிவந்தோர்: 22 மகன்கள், குறைந்தது 32 மகள்கள் |
பிறப்பு | தில்லி, முகலாயப் பேரரசு | 24 அக்டோபர் 1775
இறப்பு | 7 நவம்பர் 1862 87) ரங்கூன், பர்மா, பிரித்தானியப் பேரரசு | (அகவை
புதைத்த இடம் | நவம்பர் 7, 1862 ரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம் |
மனைவிகள் |
|
அரசமரபு | முகலாய வம்சம் |
தந்தை | இரண்டாம் அக்பர் சா |
தாய் | லால்பாய் |
தொழில் | முகலாயப் பேரரசர்; உருதுப் புலவர் |
இரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
இரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.
பகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.
சிப்பாய்க் கிளர்ச்சி விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.
இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த ஹுமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஹட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] [3] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[4] இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[5]
நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.
Kitna hai badnaseeb Zafar
Dafn ke liye
Do gaz zameen bhi
Mil na saki kuye yaar mein
தமிழ் மொழிபெயர்ப்பு:
எத்தனை அதிட்டசாலி சஃபார்
புதைப்பதற்கு
ஆறு அடி நிலம் கூட
கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்
பகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[7] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
மணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:
ஆண்மக்களில் சிலர்:
பெண்மக்களில் சிலர்
பகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:
பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.