![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Flag_of_Japan_%25281870%25E2%2580%25931999%2529.svg/langta-640px-Flag_of_Japan_%25281870%25E2%2580%25931999%2529.svg.png&w=640&q=50)
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு
1941 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை, சப்பானிய இராணுவம் மலாயாவை ஆக்கிரமிப்பு செய் / From Wikipedia, the free encyclopedia
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு அல்லது மலாயாவில் சப்பானிய ஆட்சி; (ஆங்கிலம்: Japanese occupation of Malaya; மலாய்: Pendudukan Jepun di Tanah Melayu) என்பது 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சப்பானிய இராணுவம் மலாயாவை ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும்.
Japanese Occupation of Malaya Malai マライMarai | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1941–1945 | |||||||||||||
கொடி | |||||||||||||
குறிக்கோள்: Eight Crown Cords, One Roof 八紘一宇 | |||||||||||||
நாட்டுப்பண்: கிமி ஙா யொ | |||||||||||||
![]() சப்பானிய ஆக்கிரமிப்பில் மலாயா சிங்கப்பூர் 1942 | |||||||||||||
நிலை | சப்பானிய பேரரசின் இராணுவ ஆக்கிரமிப்பு | ||||||||||||
தலைநகரம் | இல்லை சிங்கப்பூர் (1942–1944) தைப்பிங் (1944–1945) | ||||||||||||
அரசாங்கம் | இராணுவ ஆக்கிரமிப்பு | ||||||||||||
மாமன்னன் | |||||||||||||
• 1942-1945 | இறோகித்தோ | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரண்டாம் உலகப் போர் | ||||||||||||
8 டிசம்பர் 1941a | |||||||||||||
• கோத்தா பாருவில் சப்பானிய படைகள் | 8 டிசம்பர் 1941 | ||||||||||||
• பிரித்தானிய படைகள் சிங்கப்பூருக்குப் பின்வாங்குதல் | 31 சனவரி 1942 | ||||||||||||
18 அக்டோபர் 1943 | |||||||||||||
• சப்பான் சரணடைதல் | 15 ஆகஸ்ட் 1945 | ||||||||||||
• பிரித்தானிய இராணுவ நிர்வாகம் | 12 செப்டம்பர் 1945 | ||||||||||||
• மலாயன் யூனியன் உருவாக்கம் | 1 ஏப்ரல் 1946 | ||||||||||||
நாணயம் | சப்பானிய அரசாங்க டாலர் ("வாழைமரக் காசு") | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா | ||||||||||||
|
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Newly-arrived_Indian_troops.jpg/640px-Newly-arrived_Indian_troops.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/HMS_Prince_of_Wales_sinking.jpg/320px-HMS_Prince_of_Wales_sinking.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Japanese_troops_at_Johore.jpg/320px-Japanese_troops_at_Johore.jpg)
1941 டிசம்பர் 8-ஆம் தேதி, சப்பானிய படைகள் மலேசியா, கோத்தா பாருவில் தரை இறங்கின. நேச நாடுகளின் இராணுவப் படைகள் 1942 பிப்ரவரி 16-ஆம் தேதி சிங்கப்பூரில் சப்பானிய இராணுவத்திடம் சரண் அடைந்தன.
1945-ஆம் ஆண்டில், நேச நாடுகளிடம் சப்பானியர் சரணடையும் வரை மலாயாவை ஆக்கிரமிப்பு செய்தனர். 1945 செப்டம்பர் 2-ஆம் தேதி, மலாயா, பினாங்கில் எச்.எம்.எஸ். நெல்சன் கப்பலில் (HMS Nelson) முதல் சப்பானியப் படை சரண் அடைந்தது. தங்களின் ஆயுதங்களைப் பிரித்தானியர்களிடம் ஒப்படைத்தது. அத்துடன் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பும் ஒரு முடிவிற்கு வந்தது.[1]