மழநாடு
தமிழ்நாட்டு மண்டலம் / From Wikipedia, the free encyclopedia
மழவர் நாடு அல்லது மழநாடு (Mazhanadu) என்பது தொண்டை நாடு மற்றும் கர்நாடகம் ஆகியவற்றின் இடையே உள்ள நிலப் பகுதியை குறிப்பிடப்படுவதாகும். மழநாடு சேர மரபினரின் கிளைக் குடியினரால் ஆளப்பட்ட பகுதியாகும். மழநாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கும்.[2] பண்டைய சங்க காலத்தில் இப்பகுதியை மழவர் மன்னன் கொல்லி மழவன் ஆண்டான். பிரபல சங்க கால பெண் புலவரான ஔவையார் . தகடூரைச் சேர்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி, கொல்லிமலை வல்வில் ஓரி போன்ற மழவர் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். மழநாடு மேல்மழநாடு (மேற்கு மழநாடு), [3] [4] கீழ்மழநாடு (கிழக்கு மழநாடு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ்மழநாடு ஒரு காலத்தில் கொல்லி மழவனாலும் அவரது மரபினராலும் ஆளப்பட்டது. கீழ்மழநாடு அதன் நீர் வளத்திற்காக நன்கு அறியப்பட்டதாக ஒரு தமிழ்க் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [5]
மழநாடு
மழவர் நாடு | |
---|---|
மண்டலம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பிரிந்தியம் | மழநாடு |
உள்ளடங்கிய மாவட்டங்கள் | சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி |
பெரிய நகரம் | |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு, இந்திய அரசு |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 85,95,309 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620-636xxx |
வாகனப் பதிவு | TN 24, TN 27, TN 28, TN 29, TN 30,TN 34, TN 45, TN 46, TN 48, TN 52, TN 54, TN 61, TN 70, TN 77, TN 88, TN 90, TN 93 |