ரந்தாவ் பாஞ்சாங்
மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
ரந்தாவ் பாஞ்சாங், (மலாய்: Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang; தாய்: รันเตาปันจัง; ஜாவி: رنتاو ڤنجڠ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ரந்தாவ் பாஞ்சாங், நாடு ...
ரந்தாவ் பாஞ்சாங் | |
---|---|
Rantau Panjang | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°01′14″N 101°58′09″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | பாசிர் மாஸ் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 17200 |
மலேசியத் தொலைபேசி எண் | +609 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
மூடு
மலேசியா - தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[1]