தமிழீழம்
From Wikipedia, the free encyclopedia
தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, දෙමල ඊලම්) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களையும் புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய நிலப்பகுதியை குறிப்பதாகும்.
தமிழீழம் | |
---|---|
கோரப்பட்ட நாடு | |
தமிழீழம் | |
தமிழீழத்திற்காகக் கோரப்பட்ட நிலப்பரப்பு | |
தலைநகர் | திருக்கோணமலை |
பெரிய நகரம் | திருக்கோணமலை |
மாவட்டங்கள் | |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 21,952 km2 (8,476 sq mi) |
• நிலம் | 20,533 km2 (7,928 sq mi) |
• நீர் | 1,419 km2 (548 sq mi) 6.46% |
மக்கள்தொகை (2009)[2] | |
• மொத்தம் | 34,96,000 |
• அடர்த்தி | 160/km2 (410/sq mi) |
இனம்(1981)[3] | |
• தமிழர் | 1,189,000 (1981) – 1,388,828 (2001) |
• சிங்களவர் | 45,000 (1981) – 685,896 (2011) |
• முஸ்லிம்கள் | 415,267 (16.11%) |
• இந்தியத் தமிழர் | 76,905 (2.98%) |
• பரங்கியர், வேடுவர் | 10,292 (0.40%) |
சமயம்(1981)[4] | |
• இந்து | 1,251,742 (48.57%) |
• பௌத்தம் | 498,938 (19.36%) |
• முசுலிம் | 422,239 (16.38%) |
• கத்தோலிக்கம் | 381,679 (14.81%) |
• ஏனைய | 22,590 (0.88%) |
அதிகாரபூர்வ மொழி | தமிழ் |
தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பட்ட உணர்வாகும்.
தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.