திருப்பாற்கடல்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாகக் கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்புப் படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன. [2]
இறைவன் இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம்பணை மேல் தெற்கு நோக்கி தூங்கும் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர். இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன. விமானம் அஷ்டாங்க விமானம்.