அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (மொ.பெ. All India Anna Dravidian Progressive Federation; சுருக்கம் அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரனால் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி ஆகும். கா. ந. அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை ம. கோ. இராமச்சந்திரனால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
---|---|
சுருக்கக்குறி | அஇஅதிமுக |
நிறுவனர் | எம். ஜி. இராமச்சந்திரன் |
பொதுச் செயலாளர் | எடப்பாடி கே. பழனிசாமி |
நாடாளுமன்ற குழுத்தலைவர் | மு. தம்பிதுரை |
மாநிலங்களவைத் தலைவர் | மு. தம்பிதுரை |
தொடக்கம் | 17 அக்டோபர் 1972; 51 ஆண்டுகள் முன்னர் (1972-10-17) |
பிரிவு | திராவிட முன்னேற்றக் கழகம் |
தலைமையகம் | புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை, 226, வி.பி. இராமன் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600014, தமிழ்நாடு, இந்தியா |
மாணவர் அமைப்பு | அஇஅதிமுக மாணவரணி |
இளைஞர் அமைப்பு | எம்.ஜி.ஆர். இளைஞரணி |
பெண்கள் அமைப்பு | அஇஅதிமுக மகளிரணி |
தொழிலாளர் அமைப்பு | அண்ணா தொழிற்சங்க பேரவை |
விவசாயிகள் அமைப்பு | அஇஅதிமுக விவசாயப் பிரிவு |
உறுப்பினர் | 20.05 மில்லியன் உறுப்பினர்கள் |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | மத்தியிலிருந்து[4] மத்திய-இடது[5] |
நிறங்கள் | பச்சை |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி[6] |
கூட்டணி | அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 3 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (தமிழ்நாடு சட்டப் பேரவை) | 62 / 234 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (புதுச்சேரி சட்டப் பேரவை) | 0 / 30 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www.aiadmk.com | |
இந்தியா அரசியல் |
9 பிப்ரவரி 1989 முதல் 5 திசம்பர் 2016 வரை, அஇஅதிமுக பொதுச் செயலாளராக ஜெ. ஜெயலலிதா தலைமை வகித்தார். 21 ஆகத்து 2017 முதல் 23 சூன் 2022 வரை, இக்கழகம் இரட்டை தலைமையின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி க. பழனிசாமி ஆகியோர் முறையே கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் தலைமை வகித்தனர்.
11 சூலை 2022 முதல், அஇஅதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகித்து வருகிறார்.[7]
சென்னை, இராயப்பேட்டையில் உள்ள "புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் மாளிகை" கழகத்தின் தலைமைச் செயலகமாகும். எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான வி. என். ஜானகி இராமச்சந்திரன் அவர்களால் 1986ஆம் ஆண்டு கழகத்திற்கு அக்கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.[தெளிவுபடுத்துக]