இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011
From Wikipedia, the free encyclopedia
2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இலங்கையில் 2011, மார்ச் 17, சூலை 23, அக்டோபர் 8 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இலங்கை முழுவதிலும் மொத்தம் உள்ள 335 உள்ளூராட்சிச் சபைகளில் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தம் 13.7 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மீள்குடியிருப்பு மற்றும் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையாததால், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடந்த 11 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் இன்னும் முடிவடையாததால் அச்சபைகளுக்கும் 2011ல் தேர்தல்கள் நடைபெறவில்லை.
| |||||||||||||||||||||||||||||||||
322 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,327 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 65.52% | ||||||||||||||||||||||||||||||||
|
ஆரம்பத்தில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இலங்கையில் நடைபெறும் துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் காரணமாக ஏனைய 23 சபைகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 301 சபைகளில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன[1]. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டம் உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு அவற்றில் 65 சபைகளுக்கு 2011 சூலை 23 ஆம் நாள் தேர்தல்கள் நடந்தன. மேலும் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2011 அக்டோபர் 8 இல் இடம்பெற்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 32 சபைகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 9 சபைகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 5 சபைகளையும், சுயேட்சைக் குழு ஒரு சபையையும் கைப்பற்றியது[2]. 5 உள்ளூராட்சி சபைகளில் எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை, ஆனாலும் ஐமசுகூ 3 சபைகளிலும், ஐதேக ஒரு சபையிலும் (கொழும்பு), மமமு ஒரு சபையிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது.
முன்னைய தேர்தல்களைப் போலவே இத்தேர்தலிலும் தேர்தல் வன்முறைகள் பரந்த அளவில் இடம்பெற்றன.