நாசிக்-திரிம்பகேசுவர் சிம்ஹஸ்தா (Nashik-Trimbakeshwar Simhastha) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் ஆகிய மூன்று ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையிலும் நடைபெறும். திருவிழாவின் பெயர் சிங்கஸ்தா என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பாரம்பரியமாக கும்பமேளா என்று அறியப்படும் நான்கு விழாக்களில் ஒன்றாகும். மேலும் இது நாசிக்-திரிம்பக் கும்ப மேளா அல்லது நாசிக் கும்ப மேளா என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் 'நாசிக்-திரிம்பகேசுவர் சிம்ஹஸ்தா नाशिक-त्र्यंबकेश्वर सिंहस्थ कुंभमेळा, நிகழ்நிலை ...
'நாசிக்-திரிம்பகேசுவர் சிம்ஹஸ்தா
नाशिक-त्र्यंबकेश्वर सिंहस्थ कुंभमेळा
Thumb
1989இல் நடந்த கும்ப மேளா
நிகழ்நிலைதற்போதும் நடைபெறுகிறது
வகைFair
காலப்பகுதிஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகள்
நிகழ்விடம்கோதாவரி ஆற்றங்கரை
அமைவிடம்(கள்)திரிம்பகம், நாசிக்
நாடுஇந்தியா
முந்தைய நிகழ்வு2015
அடுத்த நிகழ்வு2027
பங்கேற்பவர்கள்அகோரிகள், பக்தர்கள்
வலைத்தளம்
kumbhmela2015.maharashtra.gov.in
மூடு

இந்த விழாவில் கோதாவரி ஆற்றின் கரையில், திரிம்பகேசுவர் சிவன் கோயிலில் (திரிம்பகம்) மற்றும் நாசிக் நகரில் உள்ள இராம் குண்டில் குளியல் சடங்கு நடத்தப்படுகிறது. 1789 வரை, இந்த கண்காட்சி திரிம்பகத்தில் மட்டுமே நடைபெற்றது. ஆனால் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, மராட்டிய பேஷ்வா வைணவர்களை நாசிக் நகரத்திற்கு சென்று விழாவை நடத்த ஆணையிட்டார்

வரலாறு

தோற்றம்

இந்து புராணங்களின்படி, விஷ்ணு அமிர்தத்தை ஒரு கும்பத்தில் (பானையில்) கொண்டு செல்லும்போது அதன் நான்கு இடங்களில் சொட்டுகளை விட்டுச்சென்றார். நாசிக் உட்பட இந்த நான்கு இடங்களும் கும்பமேளாவின் இன்றைய தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாசிக்-திரிம்பக சிம்ஹஸ்தாவின் வயது நிச்சயமற்றது. ஆனால் கும்ப புராணங்களுடனான அதன் தொடர்பு ஒப்பீட்டளவில் சமீபத்தியது. இது 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது . 19 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நாசிக் மாவட்ட வர்த்தமானியில் உள்ளூர் சிம்ஹஸ்தா கும்பமேளாவை விவரிக்க "கும்பமேளா" என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. [1] "கும்ப மேளா" என்ற பெயரைக் கொண்ட ஆரம்பகால நூல்கள் குலாசத்-உத்-தவாரிக் (பொ.ச. 1695) மற்றும் சாஹர் குல்ஷன் (பொ.ச. 1789). இந்த இரண்டு நூல்களும் "கும்ப மேளா" என்ற வார்த்தையை ஹரித்வார் கும்ப மேளாவை மட்டுமே விவரிக்க பயன்படுத்துகின்றன. அவை நாசிக் நகரில் சிம்ஹஸ்தாவை குறிப்பிடவில்லை. [2] நாசிக் சிம்ஹஸ்தா அரித்துவார் கும்பமேளாவிலிருந்து கும்ப கும்பமேளாவைத் தழுவியதாகத் தெரிகிறது. [3] உஜ்ஜைன் சிம்ஹஸ்தா, நாசிக்-திரிம்பக சிம்ஹஸ்தாவின் தழுவலாகும்: இது 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது, மராட்டிய ஆட்சியாளர் இரனோஜி சிந்தியா ஒரு உள்ளூர் திருவிழாவிற்கு நாசிக் முதல் உஜ்ஜைனுக்கு சந்நியாசிகளை அழைத்தபோது தொடங்கியது. [4]

2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது. [5] [6]

தேதிகள்

நாசிக்-திரிம்பகேஸ்வர் சிம்ஹஸ்தா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இராசி நிலைகளின் கலவையின் படி சரியான தேதிகள் தீர்மானிக்கப்படுகின்றன: வியாழன் மடங்கலில் இருக்கும்போது மேளா நடைபெறும் ( இந்து ஜோதிடத்தில் சிம்மம் ); அல்லது வியாழன், சூரியன் மற்றும் சந்திரன் சந்திப்பில் ( அமாவாசை ) கடகத்தில் இருக்கும்போது நடைபெறும். [7]

கடைசி கும்பமேளா 2015 இல் நடைபெற்றது; அடுத்தது 2027 இல் நடைபெறும்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.