பாவனி சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
பாவனி சமஸ்தானம் (Baoni State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். பாவனி இராச்சியம் பேட்வா-யமுனை சமவெளியில், தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜாலவுன் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் காதௌரா நகரம் ஆகும். இதனை இசுலாமிய நவாப்புகள் ஆண்டனர்.
விரைவான உண்மைகள்
பாவனி சமஸ்தானம் बावनी रियासत / باونی ریاست | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பாவனி சமஸ்தானம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1784 | ||||
• | இந்திய விடுதலை | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 313 km2 (121 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 19,780 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா[1] |
மூடு
இது 1806 முதல் பிரித்தானிய இந்தியாவின் புந்தேல்கண்ட் முகமையின் கீழிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாவனி இராச்சியம் 313 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 19,780 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .