அக்சர்தாம் கோயில் தாக்குதல்

From Wikipedia, the free encyclopedia

அக்சர்தாம் கோயில் தாக்குதல்map
Remove ads

அக்சர்தாம் கோயில் தாக்குதல் (Akshardham Temple Attack), இந்திய மாநிலமான குசராத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.[2][3] [4] தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.[1]

விரைவான உண்மைகள் அக்சர்தாம் கோயில் தாக்குதல், இடம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads