அரிதா சாவித்திரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிதா சாவித்திரி (Haritha Savithri) என்பவர் மலையாள எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 2022-ஆம் ஆண்டில் "முரிவேட்டவருடே பதகல்" என்ற நாடக நாவலுக்காகவும்[1] 2023-ஆம் ஆண்டில் "ஜின்" நாவலுக்காகவும் கேரள சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
Remove ads
இளமை
அரிதா இந்தியாவில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.[2] அரிதா, இப்போது பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வருகிறார்.[3]
நூல் பட்டியல்
சோகக்கதை
- முரிவேட்டவருடே பதகல்
மொழிபெயர்ப்புகள்
- இசுகண்டர் பாலாவின் இசுதான்புல்லின் துலிப் (Tulip of Istanbu)
- சமர் யாசுபெக்கின் தி கிராசிங் (The Crossing)
- அகமது உமித் எழுதிய ஒரு விழுங்கலின் அழுகை (The Cry of a Swallow)
புனைவு
- ஜின் (Zin)
குழந்தைகள் இலக்கியம்
- எசுபானிய நாடோடிக் கதைகள் (Spanish Nadodikathakal)
விருதுகள்

- 2022ல் முரிவேட்டவருடே பாடல்கள் என்ற பயணக்கட்டுரைக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
- 2023-இல் ஜின் நாவலுக்காகக் கேரளச் சாகித்திய அகாதமி விருது.
- 2024-ஆம் ஆண்டில் ஜினுக்கு கேரள மாநில நூலகக் குழு வழங்கிய கடம்மனிட்டா விருது[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads