ஆழ்வார்குறிச்சி

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சிவசைலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.[3]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கி.மீ. தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கி.மீ. தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கி.மீ. தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும்.[4]

பேரூராட்சியின் அமைப்பு

14.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

கல்வி நிறுவனங்கள்

  • ஸ்ரீ பரமகல்யாணி கலைக் கல்லூரி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads