இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads


இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள் (Protected areas of India) 2004 ஆம் ஆண்டு மே மாத கணக்குப்படி சுமார் 1,56,700 சதுர கிலோமீற்றர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 40% ஆகும்.

வகைப்பாடு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் வழிகாட்டலின்படி இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்களில் சில:

Remove ads

தேசியப் பூங்காக்கள்

ஐயூசிஎன் வகைப்பாடு இரண்டு : இந்தியாவில் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு தற்போதைய உத்தராகண்டம் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா தான் ஏற்படுத்தப்பட்டது. இதன் பழைய பெயர் ஹேய்லே தேசியப் பூங்கா என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் 1970 ஆண்டுகளில் மேலும் 5 தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 120 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு 39,919 km²(15,413 sq mi) ஆகும். அதே வேளையில் இந்தியாவின் மொத்த நிலப்பரபில் இது 1.21% மட்டுமே ஆகும். இக்காடுகளில் பல்வகைப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கின்றன.

Remove ads

வனவிலங்குகள் காப்பகம்

ஐயூசிஎன் வகைப்பாடு நான்கு : இந்தியாவில் 500 விலங்குகள் காப்பகம் உள்ளது. இவற்றுள் 48 புலிகள் காப்பகமும் அடங்கும்.[1] தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் ராஜாஜி தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.

உயிர்க்கோள இருப்புக்கள்

ஐயூசிஎன் வகைப்பாடு ஐந்து : இந்திய அரசு இயற்கை வாழிடங்கள் கெடாது பேணும் பொருட்டு இதுவரை 18 இடங்களில் உயிர்க்கோள மண்டலங்களை ஏற்படுத்தியுள்ளது. [2]

தேர்ந்தெடுத்து பாதுகாக்கப்படும் காடுகள்

ஐயூசிஎன் வகைப்பாடு நான்கு : இவை மேய்ச்சல் (grazing), வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டும் வேலைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகும். இந்த இடங்களில் அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக வாழும் மலைவாழ் உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழைய முடியும்.

பாதுகாப்பு மற்றும் சமூக இருப்புக்கள்

ஐயூசிஎன் வகைப்பாடு ஐந்து மற்றும் ஆறு : இப்பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் (Wildlife corridor) அதிகம் உள்ளவையும், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்ற இடைப்பட்ட மண்டலப்பகுதியாகவும் (Buffer zone) அமையப்பெற்ற இடமாகும்.

கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட காடுகள்

ஐயூசிஎன் வகைப்பாடு ஆறு : இவ்வகையான பகுதிகளில் பேண்தகுநிலையில் விலங்குகள், தாவரவளம் போன்றவை அவற்றின் வாழ்விடத்திற்கேற்ப கிராம பஞ்சாயத்தார் பாதுகாக்கின்றனர்.

தனியாரால் பாதுகாக்கப்படும் பகுதிகள்

(Private protected areas of India)

இந்த மாதரியான இடங்களை தனியாரோ, அல்லது அரசில் பதிவு செய்துள்ள அமைப்புகளோ பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.

பாதுகாப்பு பகுதிகள்

இவை தனியாரின் இடங்கள் மற்றும் அரசின் தனிப்பட்ட இடங்களை இந்திய அரசு பாதுகாகும் பகுதிளைக் குறிக்கும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads