இறேந்தை

From Wikipedia, the free encyclopedia

இறேந்தை
Remove ads

இறேந்தை என்பது நூலினால் அல்லது இழைகளினாற் பின்னப்படும் ஒரு வகையான வலைகள் போன்ற துணிப் பின்னல் ஆகும்.[1] இது பாரம்பரியக் கருவிகளைக் கொண்டோ கையாலோ பின்னப்படுகிறது..

Thumb
பெல்ஜியம் நாட்டின் புருகஸ் எனுமிடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழைமையான இறேந்தைத் துணி

தொடக்கத்தில் லினன், பட்டு, பொன், அல்லது வெள்ளி இழைகளே இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் லினன், பட்டு போன்ற நூல் வகைகள் கிடைக்கப் பெறினும் பெரும்பாலும் பருத்தி நூலே பயன்படுத்தப்படுகிறது. சில வகையான இறேந்தைத் துணிகளுக்கு செயற்கை நார் பயன்படுத்தப்படுவதுமுண்டு. ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியின் போது குறிப்பாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரிடமிருந்து இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறேந்தை பின்னும் தொழினுட்பம் பரவியது. தற்போதும் தென்னிலங்கையின் வெலிகமை நகரிலும் அண்டிய ஊர்களிலுமுள்ள கடற்கரைப் பகுதிகளில் பாரம்பரிய இறேந்தை பின்னும் கைத்தொழிலைக் காணலாம். இறேந்தை என்னும் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்து வந்ததாகும்[2].

Remove ads

படக்காட்சி

Remove ads

உசாத் துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads