எகினம்

From Wikipedia, the free encyclopedia

எகினம்
Remove ads

எகினம் சங்க காலத்தில் வீட்டு முற்றத்தில் வளர்க்கப்பட்ட பறவை. [1]
இதன் தோகையை எகினக்கவரி” எனக் கூறுவர். [2]
இது அன்னப்பறவையோடு சேர்ந்து விளையாடும். [3]
புலத்தி (வண்ணாத்தி) துவைத்த ஆடைபோல் தூய்மையான மயிர் கொண்டது. [4]2
இதன் மயிரை மெத்தையில் திணித்து வாடைக்காற்று வீசும் குளிர்காலத்தில் பயன்படுத்துவர். [5]8

Thumb
எகினம்

எகினம் என்னும் சொல்லுக்கு அன்னம், கவரிமா, நாய் என்றெல்லாம் பொருள் காண்கின்றனர். [6]

Remove ads

தொல்காப்பியம்

தொல்காப்பியம் எகின் எனக் குறிப்பிடும் சொல் எகினத்தைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
எகின் என்னும் சொல் ஒருவகை மரத்தையும், ஒருவகை விலங்கையும் குறிக்கும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இளம்பூரணர் எகினங்கோடு, எகினஞ்செதிள் (எகினமரத்துச் செதிள்), எகினந்தொல் (எகின் பழத்துத் தோல்), எகினம்பூ என மரப்பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருகிறார். [7]
விலங்கைக் குறிக்கும்போது எகினக்கால், எகினச்செவி, எகினத்தோல், எகினப்புறம் என வரும் என அந்த உரையாசிரியர் குறிப்பிடுகிறார். [8]
இந்த எடுத்துக்காட்டு எகின் என்பது விலங்கு (பறவை அன்று) என்பதை உறுதி செய்கிறது.

எகின்தான் எகினம் என்பதாயின் எகின விலங்கின் மயிர் மென்மையானதாக மெத்தையில் திணிக்கப் பயன்பட்டது எனல் வேண்டும்.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads