ஓர்ச்சா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் நிவாரி மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது. இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.
பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
ஓர்ச்சா நகரத்தின் கோட்டை வளாகத்தை[2] தற்காலிக உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சேர்க்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யுனெஸ்கோவை அணுகியுள்ளனர். [3]
Remove ads
மக்கள் தொகையியல்
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[4] அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.
படக்காட்சியகம்
- இராமர் கோயில், ஓர்ச்சா
- பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த சஹத்திரி
- இலக்குமி கோயில், ஓர்ச்சா
- ஓர்ச்சா அரண்மனை வளாகம்
- ஓர்ச்சா மன்னர் பிரதாப் சிங்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads