சந்தேலர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தேலர்கள் (Chandela or Chandel) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள் கொண்ட புந்தேல்கண்ட் பிரதேசத்தை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள்.[1] சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர்கள்.

சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.
சந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும்.[2] [3][4][5]
மன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.[6]
Remove ads
வரலாறு
கி பி 10 முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களின் முதல் தலைநகரம் கஜுராஹோ ஆகும். பின்னர் தலைநகரத்தை மகோபாவிற்கு மாற்றினர்.
கஜுரஹோ நகரத்தை தலைநகராகக் கொண்ட சந்தேல அரசு, கூர்ஜர-பிரதிகார பேரரசின் பகுதியாக இருந்தது.[7] கூர்ஜர-பிரதிகார பேரரசிற்கு திறை செலுத்தி ஆண்ட சந்தேல அரசை, நன்னூகா முதல் ஹம்மிரவர்மன் முடிய பல மன்னர்கள் ஆண்டனர். கூர்ஜர-பிரதிகார பேரரசு வீழ்ச்சையடைந்த பின்னர் தனியுரிமையுடன் சந்தேல அரசை ஆண்டனர். சந்தேல அரசர்களில் புகழ் பெற்ற மன்னர் வித்தியாதரன் (1017–1029) ஆவார்.
சந்தேல அரசின் நிறுவனர் நன்னுகா என்பவர் கஜுராஹோ நகரத்தை தலைநகராகக் கொண்டு புந்தேல்கண்ட் பகுதியை அரசாண்டார். [8]
Remove ads
சந்தேல ஆட்சியாளர்கள்
- நன்னுகா, சந்தேல அரசின் நிறுவனர்
- இராகில்யா
- ஹர்சா (900–925)
- யசோவர்மன் - (925–950) — கஜுராஹோவில் இலக்குமணன் கோயில் கட்டியவர்.
- தங்கன் - (950–1008) — கஜுராஹோவில் பார்சுவநாதர் மற்றும் விஸ்வநாதர் கோயில்களை கட்டியவர்.
- காந்தன் (1002–1017) —கஜுராஹோவில் ஜெகதாம்பிகை மற்றும் சித்திரகுப்தர் கோயில்களை கட்டியவர்
- வித்தியாதரன் - (1017–29) — கஜுராஹோவில் கந்தாரிய மகாதேவர் கோயிலைக் கட்டியவர்)
- விசயபாலன் (1035–1045) – தலைநகரை கஜுராஹோவிலிருந்து மகோபாவிற்கு மாற்றியவர்
- தேவவர்மன் – காலச்சூரிகளால் வெல்லப்பட்டவர்.
- கீர்த்திவர்மன்
- சல்லக்சணவர்மன்
- ஜெயவர்மன்
- பிரிதிவிவர்மன்
- மதனவர்மன் (1129–1163)[8]:22 – மதனசாகர் ஏரியை நிறுவியவர்
- இரண்டாம் யசோவர்மன் - 1164-1165
- பரமார்த்தி (1165-1202)[8]:22 – இவன் படைத்தலைவர்கள் மூன்றாம் பிரிதிவிராச் சௌகானுடன் போரிட்டவர்கள்
- திரைலோக்கியவர்மன் - 1203–1245
- இரண்டாம் வீரவர்மன் 1315 முடிய [8]:23
- போஜவர்மன்
- ஹம்மிரவர்மன்
Remove ads
சந்தேலர்களின் கட்டிடக் கலை
- சந்தேலர்களின் சிற்பங்கள்
- வேலைப்பாடுகளுடன் கல் சிற்பம்
- சமண சொர்க்கம், அஜய்கர்
- செல்வத்தின் அடையாளத்துடன் கால்நடைகள், அஜய்கர்
- விஷ்ணுவும் லட்சுமியும், கஜுராஹோ
- நர்த்தன கணபதி, கஜுராஹோ
- கந்தாரிய மகாதேவர் கோயில் சிற்பங்கள்
- பார்சுவநாதர் கோயில் சிற்பங்கள், கஜுராஹோ
- இலக்குமணன் கோயில் சிற்பங்கள், கஜுராஹோ
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads