கஞ்சக் கருவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சக் கருவிகள் என்பது வெண்கலம் அல்லது ஐம்பொன்னால் வார்க்கப்படும் தாளம், கைமணி, சேகண்டி முதலியவைகள் ஆகும்.[1]
கஞ்சம் என்றால் வெண்கலம் என்று பொருள். தூய வெண்கலத்தால் தயாரிக்கப்படும் கஞ்சக்கருவிகளை, தகுந்த இலக்கண வரம்பறிந்து மிக நுணுக்கமாக இசைக்க வேண்டும்.
வகைகள்
- தாளம் - கஞ்சக்கருவிகளில் முதன்மையானது. இது சிங்கி, மணி, ஜால்ரா எனும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. நாகஸ்வரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல் போன்ற லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது. ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் போன்றோர் தாளக்கருவியை பயன்படுத்துகிறார்கள்.
- சேகண்டி: - கோயில்களில் குறிப்பாக சிவன் கோயில்களில் பூஜை நேரங்களிலும்; சுவாமி புறப்பாட்டின் போதும் சேகண்டி, சங்கொலியுடன் ஒலிக்கப்படுகிறது. மேலும் இறப்பு நிகழ்வுகளிலும் சேகண்டி ஒலி எழுப்பப்படுகிறது.
- கைமணி : - அனைத்துக் கோயில்களிலும்; வீடுகளிலும் இறைவனை பூசிக்கும் போது ஒலி எழுப்பப் பயன்படுகிறது. கோயில்களில் பூசை நேரத்தை உணர்த்த எழுப்பப்படும் பெரிய வெண்கல மணியை, கைப்பிடிக்குள் அடங்கும்படி தயாரிப்பது கைமணியாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads